டீ மாஸ்டர் மர்மச் சாவு

 

மதுரை, ஏப். 5: மதுரை, உத்தங்குடியை சேர்ந்தவர் மாரிக்கண்ணன்(55). இவர் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று கடையில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து தூங்கினார். காலையில் எழுந்த அவரது மனைவி மகேஸ்வரி, கணவரின் அறைக்கு சென்றார். அங்கு அவர் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

இது குறித்து மாட்டுத்தாவணி போலீசில் மகேஸ்வரி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து மாரிக்கண்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது மரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post டீ மாஸ்டர் மர்மச் சாவு appeared first on Dinakaran.

Related Stories: