சிவகங்கை, ஏப். 4: சிவகங்கை நேரு பஜாரில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக சட்ட நகல் எரிப்பு கோராட்டம் நடைபெற்றது. அரசியலமைப்பு விரோ த மற்றும் சிறுபான்மை மக்கள் விரோத வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதை கண்டித்து சட்ட நகலை எரித்தும், மெழுகுவர்த்தி ஏந்தியும் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பாவா பகுர்தீன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் முகமது அசார் முன்னிலை வகித்தார். இந்திய தேசிய லீக் கட்சி நிர்வாகி சேக் மற்றும் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.
The post எஸ்டிபிஐ போராட்டம் appeared first on Dinakaran.
