நாய் கடித்து பெண் காயம்

 

தொண்டி, ஏப். 2: தொண்டி மற்றும் நம்புதாளை பகுதியில் நாய்களின் தொல்லை அதிகளவில் உள்ளதாக மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தொண்டி அருகே உள்ள நம்புதாளை மறவர் தெருவை சேர்ந்த முனீஸ்வரி (37), நேற்று காலை வீட்டு வாசலில் நின்றுக் கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியே சென்ற நாய் முனீஸ்வரி கையில் கடித்து பலமான காயத்தை ஏற்படுத்தியது. உடனடியாக தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முனீஸ்வரிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

The post நாய் கடித்து பெண் காயம் appeared first on Dinakaran.

Related Stories: