ஊட்டி, கொடைக்கானலில் வாகன கட்டுப்பாடு விவகாரத்தில் தலையிட முடியாது: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: தமிழ்நாட்டில் ஊட்டி , கொடைக்கானல் வருவதற்கு வானக கட்டுப்பாடு விதித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வாதத்தில், ‘‘வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான கோடைக் காலத்தில், வார நாட்களில் நீலகிரிக்கு ஒரு நாளைக்கு 6,000 சுற்றுலா வாகனங்களையும், வார இறுதி நாட்களில் 8,000 வாகனங்களையும், கொடைக்கானலில் வார நாட்களில் 4,000 வாகனங்களையும், வார இறுதி நாட்களில் 6,000 வாகனங்களையும் அனுமதிக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் ஒரு உச்சவரம்பை நிர்ணயித்தது குறிப்பாக தற்போதைய தரவுகள் இல்லாத நிலையில் உயர் நீதிமன்றம் வாகன கட்டுப்பாட்டை விதித்துள்ளது.மேலும் இந்த விதிகளின் அடிப்படையில் சுற்றுலா பேருந்துகள் கூட அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டது.

மேற்கண்ட விவகாரத்தில் மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், “இந்த விவகாரதரதில் உயர் நீதிமன்றம் அனைத்து சுற்றுச்சூழல் விவகாரங்களை கருத்தில் கொண்டுதான் இதுபோன்ற கட்டுப்பாட்டை விதித்துள்ளது. எனவே இந்த விவகாரங்களில் நாங்கள் தலையிட்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க விரும்பவில்லை” எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். அப்போது குறுக்கிட்ட மனுதாரர் வழக்கை வாபஸ் வாங்கி கொள்வதாக தெரிவித்தார். அதற்கு ஒப்புதல் வழங்கிய நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

The post ஊட்டி, கொடைக்கானலில் வாகன கட்டுப்பாடு விவகாரத்தில் தலையிட முடியாது: உச்ச நீதிமன்றம் appeared first on Dinakaran.

Related Stories: