இந்த இரு பஸ்களும் நேற்று மாலை 4.40 மணிக்கு ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி ரயில்வே தரைப்பாலம் பகுதிக்கு வந்தது. வேகமாக வந்த இரு பஸ்களும், ஒரே சமயத்தில் பாலத்தின் உள்ளே சென்றபோது நேருக்குநேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் இடிபாடுகளில் சிக்கி டிரைவர்கள், கண்டக்டர், பயணிகள் உட்பட 44 பேர் படுகாயம் அடைந்தனர். குறுகிய பாலம் என்பதால் பொக்லைன் இயந்திரம் வரவழைத்து நொறுங்கிய பஸ்களை பிரித்து, வெளியே கொண்டுவந்தனர். இதில் தனியார் பஸ் டிரைவர் கார்த்திக்கிற்கு 2 கால்களும் முறிந்தது.
The post ஊத்தங்கரை அருகே பரபரப்பு ரயில்வே தரைப்பாலத்தில் பஸ்கள் நேருக்கு நேர் மோதல்: 44 பேர் படுகாயம் appeared first on Dinakaran.