டெல்லி: மீடியா வெளிச்சத்திற்காக பிரதமர் குறித்து பேசுகிறார் விஜய் என அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். பரபரப்பான அரசியல் சூழலில் அமித்ஷாவின் அவசர அழைப்பில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நேற்று, டெல்லி சென்றுள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோரை சந்தித்து பேசினார். பின்னர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை; உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்டோரை சந்தித்து பேசினேன்; மாநில தலைவராக எனது கருத்தை கட்சி தலைவர்களிடம் தெரிவித்துள்ளேன்.
கூட்டணி தொடர்பாக பேச இன்னும் நிறைய காலம் உள்ளது. பாஜக யாருடன் கூட்டணி என்பது குறித்து பேச வேண்டிய அவசியம் தற்போதைக்கு இல்லை. கூட்டணி குறித்து எனக்கென்று தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை. கட்சி தான் முக்கியம். எனது கட்சியை வலிமைப்படுத்தவே உழைத்து வருகிறேன்; தொண்டனாகவும் பணி செய்வேன். பாஜக தேசியத் தலைவர் தேர்தல், மாநிலத் தலைவர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. கட்சி நலனைவிட தமிழக நலனே முக்கியம் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; மீடியா வெளிச்சத்திற்காக பிரதமர் குறித்து பேசுகிறார் விஜய். மைக் எடுத்து பேசி, கைகாட்டிவிட்டு போவதில்லை அரசியல்; களத்தில் வேலை செய்ய வேண்டும்.
சக்திமிக்கவர்களை பேசினால் மைலேஜ் கிடைக்கும்; அதனால் பிரதமர் பற்றி விஜய் பேசுகிறார். தினமும் போராடுவது ஒரு அரசியல்; கட்சி தொடங்கி 3 முறை வெளியே வருவது ஒரு அரசியல். கட்சி தொடங்கி விஜய் எத்தனை முறை வெளியே வந்துள்ளார்? எத்தனை முறை மக்களை சந்தித்துள்ளார்? மைக் எடுத்து கைக்காட்டி விட்டு செல்வது மட்டும் அரசியல் அல்ல களத்தில் நின்று வேலை பார்ப்பது தான் அரசியல். யாருக்கு யார் எதிரி என்பதை வாக்காளர்கள்தான் முடிவு செய்கிறார்கள் என்று கூறினார்.
The post மீடியா வெளிச்சத்திற்காக பிரதமர் குறித்து பேசுகிறார் விஜய்: அண்ணாமலை விமர்சனம் appeared first on Dinakaran.