சொத்துவரியை குறைக்க வலியுறுத்தி இன்று கடையடைப்பு

காரைக்குடி, மார்ச் 28: காரைக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள கட்டிடங்கள், குடியிருப்புகளில் சொத்து வரி கடந்த காலங்களை விட மிக அதிகமாக வசூல் செய்யப்படுவதாக புகார் எழுந்து வருகிறது. தவிர வரி வசூலில் ஈடுபடும் அதிகாரிகள் ஒரு சிலர் கடைகள் மற்றும் குடியிருப்புகளுக்கு சென்று வரம்புமீறி அநாகரிக வார்த்தைகளில் பேசுவது, சொத்தை ஜப்தி செய்து விடுவதாக மிரட்டுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக தொழில் வணிக கழகம் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாநராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்நிலையில் சொத்துவரியை குறைக்க வலியுறுத்தியும், மாநகராட்சி அதிகாரிகளின் அராஜக போக்கை கண்டித்து தொழில்வணிக கழகம், ஓட்டல் பேக்கரி, டீக்கடை சங்கம், அனைத்து அரசியல் கட்சிகள், அனைத்து பகுதியின் வியாரிகள் சங்கம், அனைத்து சேவை சங்கங்கள், அனைத்து தொழில் நலச்சங்கங்கள் உள்பட 55 பொதுநலன் காக்கும் அமைப்புகள் சார்பில் இன்று (மார்ச் 28) கடையடைப்பு மற்றும் மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை கடையடைப்பு நடத்தப்பட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

The post சொத்துவரியை குறைக்க வலியுறுத்தி இன்று கடையடைப்பு appeared first on Dinakaran.

Related Stories: