அரசு இசைக்கல்லூரியில் தமிழிசை விழா தொடக்கம்

திருவையாறு, மார்ச்27: திருவையாறு தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரியில் தமிழிசை விழா நேற்று தொடங்கியது. திருவையாறு தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரியில் தமிழிசை விழா தொடங்கியது. கல்லூரி முதல்வர்(பொ) வித்யா வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக திருவையாறு நகராட்சி தலைவர் கஸ்தூரிநாகராஜன், துணைத் தலைவர் நாகராஜன் ஆகியோர் குத்து விளக்கேற்றி சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் நகராட்சி கவுன்சிலர் ராஜ்குமார், திருவையாறு திமுக நகரப் பொருளாளர் சண்முகசுந்தரம், ஒய்வுபெற்ற பேராசிரியர் வெங்கடேசன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். அடையாறு வெங்கடேஷ், பாலசுப்பிரமணி, திருக்கடையூர் பாபு, உடுமலைப்பேட்டை மணிகண்டன் ஆகியோரின் சிறப்பு நாதஸ்வர, தவில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. முடிவில் வயலின் உதவிப்பேராசிரியர் கோவிந்தராஜன் நன்றி கூறினார்.

The post அரசு இசைக்கல்லூரியில் தமிழிசை விழா தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: