சிவகாசி, மார்ச் 25: சிவகாசியில் இந்திய தேசிய லீக் கட்சியின் சார்பில் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஏழை முஸ்லிம்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் செய்யது ஜஹாங்கீர் தலைமை தாங்கினார்.
மாவட்ட செய்தி தொடர்பாளர் தாதாமியான், வர்த்தக அணி செயலாளர் மீரான் மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்திய தேசிய லீக் அமைப்பு செயலாளர் அம்ஜத் கான் சுமார் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாநகர செயலாளர் முத்து விலாசா நன்றி கூறினார்.
The post சிவகாசியில் இஸ்லாமியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.