தஞ்சாவூர், மார்ச் 24: மின்சார வாரிய தஞ்சாவூர் நகரிய கோட்டம் சார்பில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 25ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை குறைதீர் கூட்டம் நடைபெறும். தஞ்சாவூர் கோர்ட்டு ரோட்டில் உள்ள நகரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்துக்கு மேற்பார்வை பொறியாளர் விமலா தலைமை தாங்குகிறார். இதில் தஞ்சை நகரிய கோட்டத்திற்கு உட்பட்ட நகர் எல்லையான தெற்கு வீதி, வடக்கு வீதி, மேல வீதி, கரந்தை, பள்ளியக்ரஹாரம், கீழவாசல், தொல்காப்பியர் சதுக்கம், மேரீஸ் கார்னர், அருளானந்த நகர், பர்மா காலனி, நிர்மலா நகர், யாகப்பா நகர், அருளானந்தம்மாள் நகர், பழைய வீட்டு வசதி வாரியம், காந்திஜி ரோடு, மருத்துவக் கல்லூரி ரோடு, நீலகிரி, மானோஜிப்பட்டி, ரஹ்மான் நகர், ரெட்டிப்பாளையம் ரோடு, சிங்கபெருமாள்குளம், ஜெபமாலைபுரம், வித்யா நகர், மேலவெளி பஞ்சாயத்து, தமிழ்ப்பல்கலைக்கழக வளாக குடியிருப்பு, கோட்டை ரோடு, புதிய பஸ் நிலையம், திருவேங்கட நகர், இனாத்துக்கான்பட்டி, நட்சத்திர நகர், நாஞ்சிக்கோட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் கலந்து கொண்டு மின் விநியோகம் தொடர்பான தங்கள் புகார்களை நேரில் தெரிவித்து பயன் பெறலாம் என தஞ்சை நகரிய செயற்பொறியாளர் செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.
The post தஞ்சாவூர் நகரிய கோட்டம் சார்பில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.