இந்தநிலையில், ராமேஸ்வரத்தை சேர்ந்த 11 மீனவர்களையும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதன் பின்னர் 11 மீனவர்களும் விமானம் மூலமாக சென்னைக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை இந்திய தூதரக அதிகாரிகள் செய்தனர். ஆனால் அவர்களிடம் பாஸ்போர்ட் இல்லாததால், அனைவருக்கும் எமர்ஜென்சி சர்டிபிகேட் வழங்கி விமான டிக்கெட்டும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, கொழும்பில் இருந்து நேற்றிரவு ஏர்இந்தியா பயணிகள் விமானத்தில், ராமேஸ்வரத்தை சேர்ந்த 11 மீனவர்களும் நேற்று நள்ளிரவு சென்னைக்கு வந்தனர். விமான நிலையத்தில் 11 மீனவர்களையும் மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். இதன் பின்னர் அரசு ஏற்பாடு செய்த வாகனத்தின் மூலம் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
The post இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் சென்னை வருகை appeared first on Dinakaran.