ஜனநாயகத்தை காக்க திரண்டுள்ளோம் – டி.கே.சிவகுமார்

சென்னை: தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் வரலாறு படைக்கும் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பை காக்கவும், ஜனநாயகத்தை காக்கவும் நாட்டின் பல்வேறு தலைவர்கள் திரண்டுள்ளோம். இது வெறும் தொடக்கம்தான்; அனைவரும் ஒன்றுபட்டு வெற்றி பெறுவோம். தொகுதி மறுவரையறை என்பது தென் மாநிலங்கள் மீது அரசியல் ரீதியான தாக்குதல். தென் மாநிலங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகின்றன. தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்து தென் மாநிலங்களின் குரலை ஒடுக்குவதை ஏற்க முடியாது. கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை தேசிய அளவில் முன்னெடுத்துச் செல்வோம் என்றும் கூறினார்.

The post ஜனநாயகத்தை காக்க திரண்டுள்ளோம் – டி.கே.சிவகுமார் appeared first on Dinakaran.

Related Stories: