பட்டிவீரன்பட்டி பகுதியில் காய்ப்பு இல்லாத தென்னை மரங்கள் அகற்றம்

பட்டிவீரன்பட்டி : பட்டிவீரன்பட்டி பகுதியில் காய்க்கும் தன்மை இழந்த தென்னை மரங்களை அகற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு, சிங்காரக்கோட்டை, சித்தையன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது தோப்புகளில் மிகவும் வயதான மரங்கள், காய்க்கும் தன்மை இழந்த மரங்கள் மற்றும் நோய் தாக்குதலுக்கு உள்ளான மரங்களை வெட்டி அகற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து தென்னை விவசாயிகள் சிலர் கூறியதாவது: தேங்காய் நல்ல விலைக்கு விற்பதால் தென்னை விவசாயிகளுக்கு வருமானம் திருப்திகராமாக உள்ளது. தற்போது தென்னந்தோப்புகளில் மிகவும் வயதான மரங்கள், காய்க்கும் தன்மை இழந்த மரங்கள் மற்றும் நோய் தாக்குதலுக்கு உள்ளான மரங்களை வெட்டி அகற்றி வருகிறோம்.

இந்த மரங்களை மரஅறுவை மில்களுக்கும், செங்கல் தொழிற்சாலைகளுக்கும் வாங்கி செல்கின்றனர். மீண்டும் நிலத்தை தயார் செய்து புதிதாக நாட்டுரக தென்னங்கன்றுகளை நடவு செய்ய உள்ளோம்.

தற்போது அதிகமாக ஹைபிரிட் தென்னங்கன்றுகள் வருகிறது. இவை குறைந்த வருடத்தில் காய்க்க துவங்கும். ஆனால் நாளாக நாளாக காய்க்கும் தன்மையை இழந்து விடும். நாட்டு ரக தென்னங்கன்றுகள் பலன் தர அதிக வருடங்களாகும். ஆனால் 50 வருடங்களுக்கு மேல் தொடர்ந்து காய்ப்பு தன்மை இருக்கும். இவ்வாறு கூறினர்.

The post பட்டிவீரன்பட்டி பகுதியில் காய்ப்பு இல்லாத தென்னை மரங்கள் அகற்றம் appeared first on Dinakaran.

Related Stories: