சிவந்திபுரம் அருகே ரூ.13 லட்சத்தில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தொடக்க விழா

விகேபுரம்,மார்ச் 22: சிவந்திபுரம் ஊராட்சிக்குட்பட்ட 11வது வார்டு புலவன்பட்டியில் அம்பை யூனியன் பொது நிதியில் இருந்து ரூ.13 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் அம்பை யூனியன் சேர்மன் பரணிசேகர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். விழாவில் துணை சேர்மன் ஞானக்கணி, மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் ஸ்டாலின், ஒப்பந்ததாரர் முருகன், குமார், அதியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சிவந்திபுரம் அருகே ரூ.13 லட்சத்தில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தொடக்க விழா appeared first on Dinakaran.

Related Stories: