மேட்டுப்பாளையம் – குன்னூர் மலைப்பாதையில் காட்டுயானைகள் உலா-வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

குன்னூர் : குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் வனத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் காலநிலைக்கு ஏற்ப காடுகளில் பழங்கள் காய்த்துள்ளது. முக்கியமாக நாவல் பழம், பலா உள்ளிட்ட பழங்கள் அதிகளவில் காய்த்துள்ளது. அவற்றை உண்ண வனவிலங்குகளான கரடி, யானை உள்ளிட்டவை அதிகளவில் வருகின்றன. இந்நிலையில் குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அதிகளவில் பலாப்பழ மரங்கள் உள்ளன. பலாப்பழங்களை உண்பதற்காக குட்டியுடன் கூடிய ஆறு  யானைகள் கூட்டமாக கே.என்.ஆர்.  மற்றும் புதுக்காடு போன்ற பகுதியில் முகாமிட்டுள்ளது. யானைகள் அவ்வப்போது சாலையை கடப்பதால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும் என வனத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர். மேலும் யானை கூட்டத்தை அருகே சென்று புகைப்படம் எடுக்ககோ, துன்புறுத்தவோ கூடாது என தெரிவித்துள்ளனர்….

The post மேட்டுப்பாளையம் – குன்னூர் மலைப்பாதையில் காட்டுயானைகள் உலா-வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: