- பள்ளி கல்வித் துறை
- சென்னை
- பள்ளி கல்வி அமைச்சர்
- அன்பில் மஹேஸ்போய்யாமோஷி
- TNPSC
- சென்னை செயலகம்
- அமைச்சர்
சென்னை: டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 217 பணிநாடுநர்களுக்கு பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, பணிநியமன ஆணைகளை வழங்கினார். இதற்கான நிகழ்வு சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்தது. பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் பல்வேறு ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் புதிய நபர்களை நியமிப்பதற்கான போட்டித் தேர்வு டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தப்பட்டது. அதில் தேர்வு பெற்றவர்களில் பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 186 நேரடி நியமன இளநிலை உதவியாளர்களுக்கு 15.03.2025 அன்று இணைய வழியில் பணிநியமன கலந்தாய்வு நடத்தப்பட்டது.
அக்கலந்தாய்வில் தங்களுக்கு விருப்பமான பணியிடங்களை தேர்வு செய்த 186 பணிநாடுநர்களுக்கும், தமிழ்நாடு பொது நூலகத்துறைக்கு தெரிவு செய்யப்பட்ட 24 பணிநாடுநர்களுக்கும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 7 பணிநாடுநர்களுக்கும் ஆக மொத்தம் 217 பணிநாடுநர்களுக்கு, பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அரசு சிறப்பு செயலர் ஜெயந்தி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் மற்றும் அரசு பொது நூலகத் துறை இயக்குநர் சங்கர், பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக உறுப்பினர் செயலர் குப்புசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post பள்ளிக் கல்வித் துறையில் 217 பேருக்கு நியமன ஆணைகள்: அமைச்சர் வழங்கினார் appeared first on Dinakaran.
