தொண்டி, மார்ச் 18: தொண்டி பேரூர் திமுக சார்பில் வெயிலின் தாக்கத்தை போக்க நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டது. கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மாணவர்கள் முதல் அனைவரும் பகல் நேரங்களில் கடும் அவதிப்படுகின்றனர். வெயிலின் தாக்கத்தை போக்கும் விதமாக தொண்டியில் திமுக சார்பில் நகர் செயலாளர் இஸ்மத் நானா தலைமையில் நீர்மோர் பந்தல் நேற்று பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் திறக்கப்பட்டது. மாணவர்கள், தொழிலாளர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
The post திமுக சார்பில் நீர்மோர் பந்தல் appeared first on Dinakaran.