×

கார் மீது வாகனம் மோதி வியாபாரி பலி

கிருஷ்ணகிரி, மார்ச் 15: கெலமங்கலம் அடுத்த சுல்தான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் குலாப்ஜான்(42), துணி வியாபாரி. இவர் பரந்தூர் கெலமங்கலம் ரோட்டில் உள்ள தனியார் பள்ளி அருகே, நேற்று முன்தினம் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த சரக்கு வாகனம், திடீரென கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் இடிபாடுகளில் சிக்கிய குலாப்ஜான், படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சரக்கு வாகனத்தில் வந்த தேன்கனிக்கோட்டை யாரப் நகரை சேர்ந்த முரளி(40) என்பவர் காயமின்றி உயிர்தப்பினார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த கெலமங்கலம் போலீசார், குலாப் ஜானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கார் மீது வாகனம் மோதி வியாபாரி பலி appeared first on Dinakaran.

Tags : Trader ,Krishnagiri ,Gulabjan ,Sultanpet ,Kelamangalam ,Kelamangalam Road ,Parantur ,Dinakaran ,
× RELATED திராவிட பொங்கல் வாலிபால் போட்டி