மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட பங்குச் சந்தை உயர்ந்தும் சரிந்தும் நிறைவு பெற்றது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் சென்செக்ஸ் 13 புள்ளிகள் குறைந்து 74,102 புள்ளிகளானது. தொடக்க நேர வர்த்தகத்தில் 451 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ், பிற்பகலில் மீட்சி பெற்று 13 புள்ளிகள் குறைந்து முடிந்தன. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 15 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து விற்பனையாயின. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 38 புள்ளிகள் உயர்ந்து 22,498 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 33 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து விற்பனையாயின.
The post நிஃப்டி 38 புள்ளி உயர்வு, சென்செக்ஸ் 13 புள்ளி சரிவு appeared first on Dinakaran.