* விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.1,110 கோடி வரவு
திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 2 மாதத்தில் 4 லட்சத்து 69 ஆயிரம் மெ. டன் சம்பா நெல் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.1,110 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளதாக கலெ க்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.தமிழகத்தின் உணவு உற்பத்தியில் டெல்டா மாவட்டங்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. இதில் குறிப்பாக நெல் உற்பத்தியானது 90 சதவிகித அளவில் நடைபெற்று வருகிறது.
இதனையொட்டி, திருவாரூர் மாவட்டத்தில் குறுவை மற்றும் சம்பா என ஆண்டு ஒன்றுக்கு மொத்தம் 5 லட்சம் ஏக்கரில் சாகுபடி பணியினை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நடப்பா ண்டில் அரசு சார்பில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் மூலம் விதைகள், உரங்கள் மற்றும் இடுபொருள்கள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டன. இதனையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் ஒருலட் சம் ஏக்கரில் குறுவை சாகுபடியினை விவசாயிகள் மேற்கொண்டனர்.
இதனையொ ட்டி நடப்பு காரீப் (2024-25) பருவத்திற்காக கடந்த செப்டம்பர் 1ம் தேதி அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்ட நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் 172 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 86 ஆயிரத்து 822 மெ.டென் குறுவை நெல் கொள்முதல் செய்யப்பட்டு இதற்குரிய தொகை ரூ.210 கோடியானது 19 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
அதன்பின்னர் சம்பா சாகுபடியானது நடைபெற்று தற்போது அறுவடை நடைபெற்று வரும் நிலையில் இதுவரையில் 90 சதவிகித அறுவடை பணிகள் முடிந்துள்ளன. மேலும் நெல் கொள்முதலுக்காக மாவட்டம் முழுவதும் 538 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து கலெக்டர் மோகனசந்திரன் கூறுகையில், மாவட்டத்தில் சம்பா கொள்முதல் பணியானது கடந்த ஜனவரி மாதம் 1ந் தேதி முதல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் (9ந் தேதி) வரையில் 68 நாட்களில் சன்ன ரகம் 3 லட்சத்து 42 ஆயிரத்து 404 மெ.டன்னும், பொது ரகம் 1 லட்சத்து 26 ஆயிரத்து 688 மெ.டன்னும் என மொத்தம் 4 லட்சத்து 69 ஆயிரத்து 92 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இதற்காக ஒரு லட்சத்து 14 ஆயிர த்து 507 விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.1,110 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட் டைகளில் 9ந்தேதி வரை யில் ஓரு லட்சத்து 60 ஆயிரம் மெ.டன் நெல் மூட்டைகள் வெளி மாவட்டங்களின் பொதுவிநியோக திட்டத்திற்காக ரயில்கள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.
The post திருவாரூர் மாவட்டத்தில் 2 மாதத்தில் 4.69 லட்சம் டன் சம்பா நெல் கொள்முதல் appeared first on Dinakaran.
