காரங்காடு பள்ளி முன்னாள் மாணவர்கள் ஆசிரியர் பேரவை கூட்டம்

 

திங்கள்சந்தை, மார்ச் 10: காரங்காடு புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் பேரவை கூட்டம் பள்ளியில் நடந்தது. தாளாளர் சுஜின் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை ரோஸ்லெட், ஆசிரியை லீமாரோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவர் பெலிக்ஸ்ராஜன் வரவேற்றார்.

முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பேரவைக்கு புதிய நிர்வாகிகள் வரும் கூட்டத்தில் தேர்ந்தெடுப்பது, பள்ளியில் வர்ணம் பூசுவது, இப்பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்கள் கல்வி தரம் சிறக்க இயன்ற பங்களிப்பை கொடுப்பது, பள்ளியின் 102-வது ஆண்டை சிறப்பாக கொண்டாடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னாள் மாணவர்கள் டோமினிக், ஜான்ராஜ், மைக்கேல் ராஜ், சுதாகர், ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னாள் மாணவர் நெல்சன் நன்றி கூறினார்.

 

The post காரங்காடு பள்ளி முன்னாள் மாணவர்கள் ஆசிரியர் பேரவை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: