வத்தலக்குண்டுவில் ஒன்றிய அலுவலக கட்டிட பணி மும்முரம்

வத்தலக்குண்டு, பிப். 26: வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பழைய கட்டிடத்திலேயே இயங்கி வந்தது. அங்கு போதிய வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர். இதனால் புதிய கட்டிடம் கட்டி தர கோரி கோரிக்கை விடுத்து வந்தனர். இதை ஏற்று ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தீவிர முயற்சியால் தமிழக அரசு வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.5 கோடி நிதி ஒதுக்கியது.

தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு புதிய கட்டிடம் கட்டும் பணி துவங்கிய நிலையில் தற்போது இப்பணி மும்முரமாக நடந்து வருகிறது. இப்பணிகளை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குப்புசாமி, முனியாண்டி, உதவி பொறியாளர்கள் டெல்லி ராஜா, ராஜேஸ்வரி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

The post வத்தலக்குண்டுவில் ஒன்றிய அலுவலக கட்டிட பணி மும்முரம் appeared first on Dinakaran.

Related Stories: