குலசேகரம் அருகே மோதலில் ஈடுபட்ட 4 பேர் மீது வழக்கு

குலசேகரம், பிப்.20: குலசேகரம் அருகே செருப்பாலூர் பகுதியை சேர்ந்தவர் சேவியர். அவரது மகன் தினேஷ் (29). கூலித்தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரான்சிஸ் மகன் ஜெகன் (35), கனகராஜ் மகன் அனிஷ் (30), ராபர்ட் மனைவி ஷிலா (35) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று தினேஷ் மற்றும் ஜெகன் உள்பட 3 பேர் இருதரப்பாக சேர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் காயம் அடைந்த ஜெகன், தினேஷ் ஆற்றூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவம் குறித்து தினேஷ் மற்றும் ஜெகன் ஆகியோர் குலசேகரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் தினேஷ், ஜெகன், அனிஷ், ஷிலா ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post குலசேகரம் அருகே மோதலில் ஈடுபட்ட 4 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: