வேளாங்கண்ணியில் ஏரோ டைனமிக்ஸ் ரோபோட்டிக்ஸ் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

 

நாகப்பட்டினம்,பிப்.19: வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமெரிக்க இந்திய நிறுவனம் சார்பில் ஏரோ டைனமிக்ஸ் ரோபோட்டிக்ஸ் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் அமெரிக்க இந்திய நிறுவனம் சார்பில் ஏரோ டைனமிக்ஸ் ரோபோட்டிக்ஸ் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு 2 நாட்கள் நடந்தது. 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் 220 மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.

அமெரிக்க இந்திய நிறுவனத்தின் திட்ட அலுவலர் சூரியமூர்த்தி தலைமை வகித்தார். கீழையூர் வட்டார ஆத்மா குழு தலைவரும் வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத்தலைவருமான தாமஸ்ஆல்வாஎடிசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். தலைமை ஆசிரியர் சாந்தி மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆனந்தகைலாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆத்மா குழு உறுப்பினர் மரியசார்லஸ், புகழேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பயிற்சி ஒருங்கிணைப்பாளர் மைதிலி நன்றி கூறினார்

 

The post வேளாங்கண்ணியில் ஏரோ டைனமிக்ஸ் ரோபோட்டிக்ஸ் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: