நகைகளுக்கு சுங்க வரி: தனி நீதிபதி உத்தரவுக்கு ஐகோர்ட் தடை

சென்னை: உடலில் அணிந்து வரும் நகைகளுக்கு சுங்க வரி விதிக்கும் வகையில், உடைமைகளாக கருத முடியாது என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பறிமுதல் செய்த தாலி, வளையலை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்ட தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் சுங்கத்துறை மேல்முறையீடு செய்திருந்தது. அந்த வழக்கு விசாரணையில், ரூ.50,000 மதிப்புக்கு மேலான பொருட்கள், உடைமைகளாக கருதப்பட்டு வரி வசூலிக்கப்பட வேண்டும் என சுங்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை, பிணை அல்லது உத்தரவாதம் பெற்று திரும்ப வழங்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

The post நகைகளுக்கு சுங்க வரி: தனி நீதிபதி உத்தரவுக்கு ஐகோர்ட் தடை appeared first on Dinakaran.

Related Stories: