ரூ2.50 கோடி கஞ்சா பறிமுதல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரைச் சாலை சந்திப்பில் நேற்று காலை போதைபொருள் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ராமேஸ்வரம் நோக்கி சென்ற காரை மறித்தனர். அப்போது காரை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி சென்றார். காரை சோதனையிட்டதில் சிறிய, சிறிய பார்சல்களாக 250 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. காரை பறிமுதல் செய்து, மதுரை கொண்டு சென்றனர். கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ2.50 கோடி இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

The post ரூ2.50 கோடி கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: