தேசிய உணவு தொழில்நுட்ப கல்வி மையம், புதிய விமான நிலையம் : பேரவைத் தேர்தல் எதிரொலியாக பட்ஜெட்டில் பீகாருக்கு குவியும் திட்டங்கள்

டெல்லி : பீகாரில் இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், ஒன்றிய பட்ஜெட்டில் அடுத்தடுத்து அம்மாநிலத்திற்கு அறிவிப்புகள் வெளியாகின.தேசிய உணவு தொழில்நுட்ப கல்வி மையம், புதிய விமான நிலையங்கள், தாமரை விதைகளுக்கு புதிய வாரியம் உள்ளிட்ட திட்டங்களை பீகார் மாநிலத்திற்கு அறிவித்தார் நிதியமைச்சர். இதை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

ஒன்றிய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள் பின்வருமாறு..

*தாமரை விதைகளுக்காக புதிய வாரியம் பிகாரில் அமைக்கப்படும். விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்ப உதவிகள் கொடுக்கப்படும் என்றும், வேளான்மை திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

*மேம்படுத்தப்பட்ட உதான் திட்டத்தின்கீழ் 120 புதிய வழிதடங்களில் விமான சேவை அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு. பீகாரில் ஏற்கனவே உள்ள விமான நிலையம் விரிவாக்கப்பட்டு, பசுமை விமான நிலையம் அமைக்கப்படும் எனவும் அறிவிப்பு. இதனால் 400 கோடி பயனாளிகள் பயன்பெறுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

*பீகாரில் தேசிய உணவு தொழில்நுட்ப கல்வி மையம் அமைக்கப்படும்.

*ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் குழாய் என்ற திட்டத்தில் 100% இலக்கை அடைய, ஜல் ஜீவன் திட்டம் 2028ம் ஆண்டு வரை நீட்டிப்பு

*உள்கட்டமைப்பு முதலீடுகளுக்காக ரூ. 1.5 லட்சம் கோடி, மாநிலங்களுக்கு வட்டியில்லாத கடன் வழங்கப்படும்

*ஆன்லைன் தொழில் சார்ந்த ஊழியர்களுக்கு புதிய காப்பீட்டு திட்டம் கொண்டுவரப்படும். டெலிவரி ஊழியர்கள் தங்கள் விவரங்களை பதிவு செய்ய தனி இணையதளம் உருவாக்கப்படும்.

*மாநில அரசின் பங்களிப்புடன் சுற்றுலா தளங்கள் மேம்படுத்தப்படும். தனியார் பங்களிப்புடன் மருத்துவ சுற்றுலா மேம்படுத்தப்படும்.

*மீன் உற்பத்தியை பெருக்க மீனவர்களுக்கு சிறப்பு திட்டம் அறிமுகம். மொத்த ஏற்றுமதியில் குறு, சிறு, நடுத்தர தொழில்நிறுவனங்களின் ஏற்றுமதி 45% ஆக உள்ளது.

*ஆண்டுக்கு 12.7 லட்சம் டன் உரம் உற்பத்தி செய்ய இலக்கு. 7.5 கோடி சிறுகுறு தொழில் முனைவோர் பயனடையும் வகையில் புதிய திட்டம். ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ரூ.20 கோடி வரையிலான கடனுக்கு மானியம்.

*5 லட்சம் எஸ்.சி.எஸ்.டி பெண் தொழில்முனைவோருக்கு புதிய திட்டம். 7.7 கோடி விவசாயிகளுக்கு கிஷான் கிரடிட் கார்டு வழங்கப்படும்.

*தோல்பொருட்கள் உற்பத்தி துறையில் 22 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

*தோல் மற்றும் காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு உற்பத்தி அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

*50,000 பள்ளிகளில் அட்டல் டிங்கரிங் ஆய்வகம் அமைக்கப்படும்.

*சிறு முதல் பெரிய தொழில் உற்பத்தியை அதிகரிக்க தேசிய உற்பத்தி இயக்கம் உருவாக்கப்படும்.

*கடந்த 10 ஆண்டுகளில் ஐஐடியில் 100% மாணவர் சேர்க்கை அதிகரிப்பு எனவும், 23 ஐஐடிகள் மேம்படுத்தப்படும் என்றும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.

*மேலும் அடுத்த ஆண்டு மருத்துவ கல்லூரிகளில் 10,000 புதிய இடங்கள் ஏற்படுத்தப்படும் என்றும், அடுத்த 5 ஆண்டுகளில் 75,000 மருத்துவ இடங்கள் சேர்க்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

*அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும், புற்றுநோய் மையங்கள் ஏற்படுத்தப்படும் எனவும் அறிவிப்பு

*அனைத்து இந்திய மொழிப்பாடங்களையும் டிஜிட்டல் மையமாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

*வரி செலுத்துபவர்களுக்கு பல்வேறு வசதிகளை கடந்த 10 ஆண்டுகளாக நம் அரசு செய்து வருகிறது. புதிய வருமான் வரி திட்டம் மசோதா அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும்.

The post தேசிய உணவு தொழில்நுட்ப கல்வி மையம், புதிய விமான நிலையம் : பேரவைத் தேர்தல் எதிரொலியாக பட்ஜெட்டில் பீகாருக்கு குவியும் திட்டங்கள் appeared first on Dinakaran.

Related Stories: