ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் காரி கர்மாரா பகுதியில் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே நேற்று முன்தினம் இரவு தீவிரவாதிகளின் நடமாட்டம் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து உஷாரான இந்திய வீரர்கள் அவர்களை திரும்பி செல்லும்படி எச்சரித்தனர். ஆனால் அவர்கள் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் ஊடுருவ முயன்றதால் வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் தீவிரவாதிகள் இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
The post இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் பலி appeared first on Dinakaran.