மீனவர்களின் ஆலோசனைக்கு பிறகு ‘‘இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 34 பேரையும், பறிமுதல் செய்த 3 விசைப்படகுகளையும் விடுவிக்க ஒன்றிய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நீண்ட காலமாக உள்ள மீனவர்களின் பிரச்னைக்கு இந்தியா, இலங்கை நாட்டு மீனவர்களும் சுமூகமான பேச்சுவார்த்தை நடத்தி இந்திய பாரம்பரிய எல்லையில் மீன்பிடிக்க வழிவகை செய்ய வேண்டும்’’ என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடந்தது. வரும் 31ம் தேதி காலை ராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டது.
The post இலங்கை சிறைபிடித்த 34 பேரை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் அடையாள வேலைநிறுத்தம்: ஜன. 31ல் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.
