புதுக்கோட்டை அருகே மோதலில் காயமடைந்த முதியவர் சாவு

புதுக்கோட்டை, ஜன. 4: புதுக்கோட்டை அருகே குடும்பத் தகராறில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் இறந்ததைத் தொடர்ந்து, கொலை வழக்காக மாற்றம் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அருகே உள்ள ஆம்பூர்பட்டியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி மனைவி ரீட்டாமேரி (20). இவர் கடந்த நவம்பர் 18ம் தேதி குடும்பத் தகராறில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில், ஆரோக்கியசாமி- ரீட்டாமேரியின் ஒரு வயது மகளை யார் வீட்டில் வைத்து வளர்ப்பது என்பதில் இரு குடும்பத்தினரிடையே கருத்துவேறுபாடு இருந்துள்ளது. கடந்த டிச. 25ம் தேதி இதுதொடர்பாக ஆம்பூர்பட்டியில் நடந்த பேச்சுவார்த்தையின்போது வாக்குவாதம் ஏற்பட்டு இரு குடும்பத்தினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஆரோக்கியசாமியின் தாத்தா சாமிக்கண்ணு (84) என்பவர் காயமடைந்து, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த இந்த சம்பவம் குறித்து வேளாங்கண்ணி, சூசை அம்மாள், ஆரோக்கியராஜ்,ஜோசப் தன்ராஜ், பான்டி, விஜி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. சிகிச்சை பலனின்றி சாமிக்கண்ணு நேற்று உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து மாத்தூர் போலீசார் கொலை வழக்காக மாற்றியுள்ளனர்.

The post புதுக்கோட்டை அருகே மோதலில் காயமடைந்த முதியவர் சாவு appeared first on Dinakaran.

Related Stories: