×

காந்தி பிறந்தநாளையொட்டி துபாயில் சிறப்பு நிகழ்ச்சிகள்... அமைதி மற்றும் சகிப்புதன்மைக்கான‌ நடைபயணம்

துபாய். அக் 2 மஹாத்மா காந்தி பிறந்த தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 150வது ஆண்டு பிறந்த தினத்தையோட்டி துபாயில் இந்திய துணை தூதரகம் சார்பில் சபீல் பூங்கா பகுதியில் அமைதி மற்றும் சகிப்புதன்மையை முன்னிலைபடுத்தி 4 கிலோ மீட்டர் நடைபயணம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க அதிகாலையிலிருந்து சபீல் பூங்கா பகுதியில் ஏராளமானோர் குவிய தொடங்கினர். இந்திய துணை தூதரகத்தின் துணை தூதர் விபுல் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் நடைபயணத்தில் பங்கேற்றனர். மேலும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

Tags : Events ,Birthday ,Dubai ,Gandhi ,
× RELATED ஒருநாள், 20 ஓவர் போட்டிகளில் ஸ்டாப்...