சென்னை டூ நெல்லை நாளை சிறப்பு ரயில்

சேலம்: தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு நாளை சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, திருநெல்வேலி-சென்னை சென்ட்ரல் ஏசி சிறப்பு ரயில் (06074) இன்று (27ம் தேதி) இயக்கப்படுகிறது. திருநெல்வேலியில் மாலை 4 மணிக்கு புறப்படும் இந்த ரயில், சென்னைக்கு நாளை காலை 10 மணிக்கு சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் சென்னை சென்ட்ரல்-திருநெல்வேலி ஏசி சிறப்பு ரயில் (06073) நாளை (28ம் தேதி) இயக்கப்படுகிறது. சென்னையில் பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் இந்த ரயில், காட்பாடி வழியே சேலத்திற்கு இரவு 7.47 மணிக்கு வந்து சேர்கிறது. பின்னர், 3 நிமிடத்தில் புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, பழநி, திண்டுக்கல், மதுரை, ராஜபாளையம், தென்காசி வழியே திருநெல்வேலிக்கு அடுத்தநாள் (நாளை மறுநாள்) காலை 7.15 மணிக்கு சென்றடைகிறது.

The post சென்னை டூ நெல்லை நாளை சிறப்பு ரயில் appeared first on Dinakaran.

Related Stories: