ஏழை ஆதிதிராவிடர்களுக்கு பஞ்சமி நிலத்தில் பட்டா வழங்கக் கோரி பேரணி

மதுரை, அக். 22: மதுரை மாவட்டத்தில் வசிக்கும் வீடு இல்லாத ஏழை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு, அரசு புறம்போக்கு நிலங்களை மீட்டு வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் என்று கோரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று மதுரையில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. அண்ணா பேருந்து நிலைய பகுதியிலிருந்து புறப்பட்ட பேரணியில் பங்கேற்றவர்கள், கலெக்டர் அலுவலகம் எதிரே ேகாரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மதுரை வடக்கு மாவட்டச் செயலாளர் தீபம் தலைமை வகித்தார். இதில், ஏராளமானோர் பங்கேற்றனர். முடிவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில், தங்கள் கோரிக்கை தொடர்பான மனுவை வழங்கினர்.துபோன்ற நடவடிக்கைகள் வாயிலாக படைப்புழு தாக்குதலை எளிதில் கட்டுப்படுத்தலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post ஏழை ஆதிதிராவிடர்களுக்கு பஞ்சமி நிலத்தில் பட்டா வழங்கக் கோரி பேரணி appeared first on Dinakaran.

Related Stories: