×
Saravana Stores

வண்டலூர் அருகே விஜயகாந்த் மகனுக்கு தொண்டர்கள் வரவேற்பு: கடும் போக்குவரத்து நெரிசல்

 

கூடுவாஞ்சேரி, அக்.21: வண்டலூர் அருகே விஜயகாந்த் மகனுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்ததால் கண்டிகையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் நேற்று இரவு கடும் அவதிப்பட்டனர். திருப்போரூர் அடுத்த தையூர், இளவந்தாங்கல் பகுதியில் தேமுதிக சார்பில் முப்பெரும் விழா நேற்று இரவு நடைபெற்றது. இதற்காக வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் உள்ள சென்டர் மீடியனில் வழிநெடுகிளும் தேமுதிக கட்சி கொடியும், டிஜிட்டல் பேனர்களும் அமைக்கப்பட்டன.

இதில் கலந்து கொள்வதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் வண்டலூர்-கேளம்பாக்கம் சாலை வழியாக நேற்று இரவு தனது காரில் சென்றார். அப்போது, அவரை தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் காரில் அணிவகுத்து சென்றனர். அப்போது கண்டிகை கூட்ரோட்டில் விஜயபிரபாகரனுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இதில், நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் திரண்டு வந்து பட்டாசு வெடித்து விஜயபிரபாகரனுக்கு தலையில் கிரீடம் சூட்டி, மலர் மாலை அணிவித்து கேப்டன் வாழ்க, கேப்டன் வாழ்க என்று கோஷமிட்டபடி உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால், வண்டலூர்-கேளம்பாக்கம் சாலை மற்றும் வேங்கடமங்கலம் செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து பாதிப்பில் சிக்கி கடும் அவதிப்பட்டனர்.

The post வண்டலூர் அருகே விஜயகாந்த் மகனுக்கு தொண்டர்கள் வரவேற்பு: கடும் போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,Vandalur ,Kuduvancheri ,Kandigai ,Thiruporur ,Taiyur, Ilavandangal ,DMUDIKA ,Dinakaran ,
× RELATED முரசொலி செல்வம் மறைவுக்கு பிரேமலதா விஜயகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இரங்கல்