×

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, கோவை, நீலகிரியில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டில் அக்டோபர் 20,21 தேதிகளில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai Meteorological Department ,Chennai ,Vellore ,Tirupattur ,Dharmapuri ,Krishnagiri ,Salem ,Erode ,Coimbatore ,Nilgiris ,
× RELATED தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 84% கூடுதலாக பெய்துள்ளது