குறுங்காடுகள் திட்டத்தில் 2 ஆயிரம் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

சிவகங்கை, அக்.9: இளையான்குடி அருகே கல்லடிதிடல் ஊராட்சியில் குறுங்காடுகள் அமைக்கும் திட்டத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பிரதான் தொண்டு நிறுவனம் சார்பில் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் இணைந்து கல்லடிதிடல், ஆக்கவயல், அரண்மணைகரை மற்றும் வல்லகுலம் ஊராட்சியில் 2ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது. கல்லடி திடலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு இளையான்குடி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோமளா தலைமை வகித்தார். ஒன்றிய பணி மேற்பார்வையாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். தொண்டு நிறுவன திட்ட அலுவலர்கள் மாயக்கிருஷ்ணன், கார்த்திக், கபில் மற்றும் ஊராட்சி பிரதிநிதிகள், கிராமத்தினர் கலந்து கொண்டனர்.

The post குறுங்காடுகள் திட்டத்தில் 2 ஆயிரம் மரக்கன்று நடும் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: