சங்கரன்கோவிலில் 3 ஆயிரம் பனை விதைகள் நடும் விழா நகராட்சி சேர்மன் பங்கேற்பு

சங்கரன்கோவில், அக்.8: சங்கரன்கோவில் நகராட்சி சார்பில் 3 ஆயிரம் பனை விதைகள் நடும் விழா நடந்தது. இதில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி தலைமை வகித்து பாட்டத்தூர் குளத்தின் அருகில் பனை விதைகளை நட்டு தொடங்கி வைத்தார். சங்கரன்கோவில் நகராட்சியில் உள்ள 30 வார்டு பகுதிகளிலும் பனை விதைகள் நடப்பட்டது. விழாவில் சுகாதார அலுவலர் வெங்கட்ராமன், சுகாதார ஆய்வாளர்கள் கைலாசம், கருப்பசாமி, திமுக மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சரவணன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சங்கரன்கோவிலில் 3 ஆயிரம் பனை விதைகள் நடும் விழா நகராட்சி சேர்மன் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: