கஞ்சா விற்ற தொழிலாளி கைது

பாலக்கோடு, அக்.1: தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாரண்டஅள்ளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது மாரப்பன் தெருவில் சந்தேகப்படும் வகையில் கையில், பையுடன் நின்றிருந்த ஆண் மற்றும் பெண் போலீசாரை கண்டதும் தப்பியோடினர். போலீசார் அவர்களை துரத்தி சென்று பிடித்தனர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (34), அவரது மனைவி சரண்யா (29) என்பதும், கஞ்சா விற்க முயன்றதும் தெரிய வந்தது. இதனையடுத்து சக்திவேலை கைது செய்த போலீசார், தப்பியோடிய சரண்யாவை தேடி வருகின்றனர்.

The post கஞ்சா விற்ற தொழிலாளி கைது appeared first on Dinakaran.

Related Stories: