வழிவிடுமாறு கூறியதால் ஆத்திரம் ஓட்டுநருக்கு உருட்டு கட்டை அடி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த ஒழலூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (59). இவர், மகேந்திராசிட்டி பகுதியில் உள்ள பிரபல ஐ போன் தயாரிக்கும் தொழிற்சாலையில் பேருந்து ஓட்டுநராக கடந்த ஒரு ஆண்டாக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில், இரவு நேர பணிக்காக ஊழியர்களை பேருந்தில் ஏற்றி செல்ல நேற்று முன்தினம் இரவு முருகன் பொன்விளைந்தகளத்தூர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை எடுக்க சென்றபோது பேருந்தின் முன்பக்கம் மூன்று நபர்கள் மது அருந்துக்கொண்டிருந்தனர்.

அப்போது, பேருந்து செல்ல வழி விடுமாறு பேருந்து ஓட்டுநர் முருகன் கேட்டுள்ளார். அப்போது, அங்கு மது அருந்திக்கொண்டிருந்த மூன்று பேர் முருகனை ஆபாசமாக பேசியும் உருட்டு கட்டையால் தாக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து முருகன் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post வழிவிடுமாறு கூறியதால் ஆத்திரம் ஓட்டுநருக்கு உருட்டு கட்டை அடி appeared first on Dinakaran.

Related Stories: