நிதி நிறுவன மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க மயிலாப்பூரில் சிறப்பு முகாம்

சென்னை: மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க மயிலாப்பூரில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் ஆவணங்களுடன் புகார் அளிக்க மயிலாப்பூரில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தி மயிலாப்பூர் இந்து பெர்மனன்ட் ஃபண்ட் நிதி நிறுவனம் முதலீட்டாளர்களிடம் ரூ.24 கோடி மோசடி என புகார் அளிக்கப்பட்டுள்ளது. நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்டதாக தேவநாதன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி தொடர்பாக இதுவரை 3,000 பேர் புகார் அளித்துள்ளதாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.

The post நிதி நிறுவன மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க மயிலாப்பூரில் சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: