வில்லன் நடிகர் விநாயகன் ஜாமீனில் விடுவிப்பு

திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விநாயகன். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் நேற்றுமுன்தினம் விமானம் மூலம் கொச்சியில் இருந்து ஐதராபாத் வழியாக கோவா செல்ல திட்டமிட்டு இருந்தார்.  ஐதராபாத் விமான நிலையத்தில் விநாயகனிடம் பாதுகாப்பு அதிகாரிகள் டிக்கெட் மற்றும் ஆவணங்களை காண்பிக்குமாறு கூறினர். அதற்கு மறுத்த விநாயகன், பாதுகாப்பு அதிகாரிகளுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மேலும் பாதுகாப்பு சோதனைகளுக்கும் அவர் ஒத்துழைக்க மறுத்தார். குடிபோதையில் இருந்த நடிகர் விநாயகன், ஒரு அதிகாரியின் கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் அவரை காவலில் எடுத்து ஐதராபாத் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் நள்ளிரவில் விநாயகனை போலீசார் ஜாமீனில் விடுவித்தனர்.

The post வில்லன் நடிகர் விநாயகன் ஜாமீனில் விடுவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: