×

படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான போட்டி தேர்வுப் பயிற்சி: அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு: டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஐபிபிஎஸ், ஆர்ஆர்பி ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்வலர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரி வளாகத்தில் 500 ஆர்வலர்களுக்கும் மற்றும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநிலக் கல்லூரி வளாகத்தில் 300 ஆர்வலர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் ஆர்வலர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணைய வழியாக விண்ணப்பங்கள் பெற்று, புதிதாக சேர்க்கை நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகள் பகல் 2 மணி முதல் 5 மணி வரை 6 மாத காலம் வாராந்திர வேலை நாட்களில் நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் ஆர்வலர்கள் குறைந்த பட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு 01-1-2024 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

இந்த போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் உணவு மற்றும் தங்கும் வசதிகள் இல்லை. பயிற்சியில் சேர விரும்பும் ஆர்வலர்கள் போட்டித் தேர்வுகள் பயிற்சி மைய இணையதளம் www.cecc.in வாயிலாக நாளை முதல் (10ம் தேதி) வரும் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களை 044-25954905 மற்றும் 044- 28510537 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பெறலாம் 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இனவாரியான இடங்களுக்கு ஏற்ப ஆர்வலர்கள் தெரிவு செய்யப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். அக்டோபர் 2வது வாரத்தில் வகுப்புகள் தொடங்கப்படும்.

The post படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான போட்டி தேர்வுப் பயிற்சி: அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu Government ,Tamil Nadu ,TNPSC ,SSC ,IBPS ,RRB ,
× RELATED கல்லூரிகளில் நாப்கின் வழங்கும்...