பெண்களுக்கான அழகு சாதன பொருட்கள், ஹெல்த் கேர் பொருட்கள், மணப்பெண் உடைகள், பேஷன், நுகர்வோர் பொருட்கள், ஜூவல்ஸ், கைவினை பொருட்கள், வீட்டு அலங்கார பொருட்கள், பர்னிச்சர்கள், ஊட்டச்சத்து பொருட்கள், ஆர்கானிக் பொருட்கள், மருத்துவம், விளையாட்டு உடைகள், ஸ்டேஷனரி பொருட்கள், எலக்ட்ரானிக் ஜேஜெட்டுகள், ஆட்டோ மொபைல், ரியல் எஸ்டேட் என அனைத்து ஷாப்பிங்குகளும் ஒரே இடத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன. இதற்காக ஷாப்பிங்கில் 100க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இடம் பெற்றுள்ளன. இந்த ஷாப்பிங்கை கண்டுகளிக்க அனுமதி இலவசம் ஆகும். காலை 10.30 மணி முதல் இரவு 8 மணி வரை ஷாப்பிங் திருவிழாவை பார்வையிடலாம்.
இதன் தொடக்கவிழா இன்று காலை 10.30 மணியளவில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது. கண்காட்சியை தமிழ்நாடு சமூக நலன் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் திருவிழாவை தொடக்கி வைத்தார். கனரா வங்கி பொதுமேலாளர் கே.ஏ.சிந்து, லைப்லைன் மருத்துவமனை தலைமை இயக்க அதிகாரி டாக்டர் நடேஷ், யூனியன் பேங்க் ஆப் இந்தியா பொது மேலாளர் ஸ்ரீசத்யபன் பெஹேரா, பதஞ்சலி துணைத்தலைவர் பி.வி.கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினர். மேலும் முக்கிய பிரமுகர்கள் கண்காட்சியில் பங்கேற்றனர். கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் எளிதில் பார்வையிடும் வகையில் பொதுமக்களுக்காக பிரத்யேக வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
The post நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சன் குரூப் ‘தோழியின்’ மாபெரும் ஷாப்பிங் திருவிழா.. 3 நாட்கள் நடக்கிறது; அனுமதி இலவசம் appeared first on Dinakaran.