இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு, இது தொடர்பாக அமலாக்கத் துறையும், திகார் சிறை நிர்வாகமும் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒரு வாரத்துக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சொந்தமான ரூ.55 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. மேலும் ஓட்டல், ஆடம்பர பங்களா மற்றும் ஜாக்குவார், மெர்சிடிஸ் போன்ற 7 உயர் ரக வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சட்டவிரோத பணபரிவர்த்தனை சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ரூ. 2 ஆயிரம் கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கின் ரூ.55 கோடி மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை appeared first on Dinakaran.