மேலும், கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய சென்ற வேறு சில பக்தர்களிடம் கோயில் தீட்சிதர்கள் பணம் கேட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து சிதம்பரம் நகர காவல் நிலையத்திற்கு சென்ற ஜெயசீலா, கோயிலில் நடந்த சம்பவங்கள் குறித்தும் தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் போலீசில் புகார் அளித்தார். இதேபோல ஏற்கனவே தீட்சிதர்கள் மீது ஜெயசீலா போலீசில் புகார் அளித்து அதில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
The post சிதம்பரம் கோயிலில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய பணம் கேட்ட தீட்சிதர்கள்: போலீசில் பெண் பக்தர் அளித்த புகாரால் பரபரப்பு appeared first on Dinakaran.