இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், என்.செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறை நிர்வாகத்திடம் அளிக்கப்பட்ட மனுவை பரிசீலிக்க 28 நாட்கள் அவகாசம் உள்ள நிலையில் 15 நாட்களுக்குள்ளாகவே ஏன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் எஸ்.நதியா, அவசர சூழல் காரணமாகவே மனுத்தாக்கல் செய்யப்பட்டதாக கூறினார். இதனை ஏற்ற நீதிபதிகள், மனுதாரரின் கணவருக்கு 28 நாட்கள் விடுப்பு வழங்கி உத்தரவிட்டனர். மேலும், தண்டனை கைதிகள் விடுப்புக் கோரி விண்ணப்பிக்கும் மனுவை உரிய கால அவகாசத்துக்குள் பரிசீலிக்க சிறைத்துறைக்கு உத்தரவிட்டனர். உரிய கால அவகாசத்துக்குள் விண்ணப்பங்களை பரிசீலிக்காத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.
The post விடுப்பு கோரி விண்ணப்பிக்கும் தண்டனை கைதிகளின் மனுக்களை உரிய காலத்தில் பரிசீலிக்காத சிறைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை appeared first on Dinakaran.