திருச்சி மண்டல போக்குவரத்து துறையில் சிறப்பாக பணியாற்றியவர்கள் கவுரவிப்பு

 

திருச்சி, ஆக.22: திருச்சி மண்டலத்தில் போக்குவரத்து துறையில் சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு நிர்வாக இயக்குனர் சால்வை அணிவித்து கவுரவித்தார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சி மண்டல அலுவலகத்தில் திருச்சி மண்டலத்தில் போக்குவரத்து துறையில் சிறப்பாக பணியாற்றிய (செயல்திறன் மிக்க) 14 ஓட்டுநர்கள் மற்றும் 15 நடத்துனர்களுக்கு நேற்று கும்பகோணம் கோட்டம் நிர்வாக இயக்குனர் பொன்முடி சால்வை அணிவித்து கவுரவித்தார்.அதனைத் தொடர்ந்து கௌரவிக்கப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுடன் நிர்வாக இயக்குனர் பொன்முடி மதிய உணவு அருந்தினார். முதன்மை தணிக்கை அலுவலர் (கூட்டாண்மை ) சிவகுமார், பொது மேலாளர் முத்துகிருஷ்ணன், துணை மேலாளர் (கூட்டாண்மை வணிகம்) சுரேஸ், துணை மேலாளர் (வணிகம்) புகழேந்திராஜ், உதவி மேலாளர் (தொழில்நுட்பம்) ராஜேந்திரன், மற்றும் நடத்துனர்கள் ஓட்டுநர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

The post திருச்சி மண்டல போக்குவரத்து துறையில் சிறப்பாக பணியாற்றியவர்கள் கவுரவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: