இதுகுறித்து வனத்துறை அதிகாரி கூறியதாவது: அவரது வீட்டிற்கு சென்று பார்த்தோம். அங்கு சிக்கன் சமைத்து சாப்பிட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்தது. எஞ்சியிருந்த இறைச்சியை பரிசோதனைக்கு அனுப்பி உள்ளோம். அது உண்மையிலேயே மயில் கறியா அல்லது சிக்கனா என்பதை உறுதி செய்யப்படும். அது சிக்கனாக இருந்தால் அவர் மீது ஏமாற்றுதல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய போலீசில் ஒப்படைக்கப்படும். மயில் கறியாக இருந்தால் வனத்துறை சட்டத்தின்படி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய பறவையான மயில் படத்தை வைத்து பதிவு செய்தால் நிறைய பேர் யூடியூபை பார்பார்கள் என்பதற்காக அவர் சிக்கன் கறியை சமைத்து போட்டோவில் மயில் வைத்துபெயரை மட்டும் பதிவு செய்வதாக கூறுகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.
* ‘கிராபிக்ஸ் மயில்தான் உண்மையானது கிடையாது’
கைது செய்யப்பட்ட பிரணய்குமார் கூறுகையில், ‘நான் சிக்கன் கறி சமைத்து வியூவர்ஸ் அதிகமாக வேண்டும் என்பதற்காக மயில் கறி என்று வைத்தேன். ஆனால் சிலர் அது மயில் கறி தான் என்று கூறுகிறார்கள். அதிகாரிகள் நான் சமைத்த சிக்கனை கொண்டு வந்துள்ளனர். சோதனையில் அது மயில் கறி என்றால் அதற்கு உண்டான தண்டனையை ஏற்க நான் தயார். மயிலை கிராபிக்ஸ் மூலமாக நான் கையில் வைத்திருப்பதுபோன்று வடிவமைத்து யூடியூபில் அப்லோட் செய்தேன். நேற்றுமாலை யூடியூபில் பதிவு செய்த நிலையில் அதில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததால் அதனை டெலிட் செய்துவிட்டேன்’ என்றார்.
The post அதிகம் பார்வையாளர்களை கவர மயில்கறி சமையல் வீடியோ வெளியிட்ட யூடியூபர் கைது appeared first on Dinakaran.