ஆண்டிபட்டியில் ஆட்டோ ஸ்டாண்டிற்கு இடம் ஒதுக்க கோரிக்கை

ஆண்டிபட்டி, ஆக. 10: ஆண்டிபட்டி வைகை ரோடு சந்திப்பில் எம்ஜிஆர் சிலை அருகே ஆட்டோக்களுக்கு இடம் ஒதுக்கித்தர வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் பேரூராட்சி அலுவலகத்தில் முறையிட்டனர். ஆண்டிபட்டி எம்.ஜி.ஆர்., சிலை அருகே வைகை அணை செல்லும் ரோடு சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது. விரிவாக்கம் செய்யப்பட்ட இடங்களில் சிலர் கடைகளை அமைத்தனர். சைக்கிள், தள்ளு வண்டிகளில் கடைகள் அதிகமானதால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகத்தினர், நெடுஞ்சாலைத்துறையினர் அப்பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தினர். இதையடுத்து அப்பகுதியில் இருந்த ஆட்டோ ஸ்டாண்டையும் வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட்டனர். இந்த நிலையில், ஆட்டோ ஸ்டாண்ட் அப்பகுதியில் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கக் கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளிடம் முறையிட்டனர்.உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் அவர்களிடம் தெரிவித்ததையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

The post ஆண்டிபட்டியில் ஆட்டோ ஸ்டாண்டிற்கு இடம் ஒதுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: