காக்கைகள் கொத்தி உயிருக்கு போராடிய குயில் மீட்பு

முத்துப்பேட்டை, ஆக.10: முத்துப்பேட்டை ஆசாத்நகர் மில்லு கொல்லை குடியிருப்பு பகுதியில் குயில் ஒன்று காக்கைகள் கொத்தி உயிருக்கு போராடியது. இதை பார்த்த அதே பகுதியை சேர்ந்த மருத்துவர் சையது அபுதாகிர் உயிருக்கு போராடிய குயிலை மீட்டு முதலுதவி செய்து முத்துப்பேட்டை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து வனச்சரக அலுவலர் ஜனனி, வனவர் சீனிவாசன் ஆகியோரின் உத்தரவின் பேரில் அங்கு சென்ற வன காப்பாளர் இளையராஜா வன காவலர் மாரிமுத்து உயிருக்கு போராடிய குயிலை பெற்றுக்கொண்டு வந்து முத்துப்பேட்டை கால்நடை மருத்துவமனை மருத்துவர் மகேந்திரன் மருத்துவக்குழுவினரால் உரிய சிகிச்சையளிக்கப்பட்டு முத்துப்பேட்டை வனத்துறை அலுவலகத்தில் பராமரித்து வரப்படுகிறது.

The post காக்கைகள் கொத்தி உயிருக்கு போராடிய குயில் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: